Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
திருவண்ணாமலையில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மின் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு மின்சார வாரியமே நேரடியாக ரூ.350 தினக்கூலியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகிகள், ஒப்பந்த தொழிலாளர்கள், என பலர் கலந்து கொண்டனர்.