/* */

குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

சேத்துப்பட்டு அருகே குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்தார்.

HIGHLIGHTS

குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு
X

சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த கற்பகம்

சேத்துப்பட்டை அடுத்த நம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. இவருடைய மனைவி கற்பகம் (வயது 45). இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது 3-வது மகன் விஜயகுமார் (18) பிளஸ்-2 படித்து வருகிறார்.

தொடர் மழையால் வீட்டின் சுவர் ஈரமாகி வலுவிழந்து காணப்பட்டது. நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சுவர் திடீரென இடிந்து வீட்டுக்குள் விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட கற்பகம் உயிரிழந்தார்.

இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட அவரது மகன் விஜயகுமார் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து விஜயகுமாரை அவர்கள் மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அறிந்த சேத்துப்பட்டு போலீசார் கற்பகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

தகவலறிந்த சேத்துப்பட்டு வட்டாட்சியர் இடிந்த வீட்டை நேரில் சென்று பார்வையிட்டார். . இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Updated On: 18 Nov 2021 6:35 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  6. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  7. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  8. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  9. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி