/* */

தான் படித்த அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

போளூரில் தான் படித்த அரசு பள்ளி புனரமைப்பு பணிக்காக ரூ.10 லட்சத்தை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கினார்.

HIGHLIGHTS

தான் படித்த அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
X

தான் படித்த அரசு பள்ளி புனரமைப்புபணிக்கு ரூ.10 லட்சத்தை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கினார்.

போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பள்ளியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இப்பள்ளியில் 6 மற்றும் 7-ம் வகுப்பு படித்தார். அவரது தந்தை போளூரில் உள்ள சங்கர வேத பாடசாலையில் ஆசிரியராக பணி புரிந்தார். அப்போது இவர் தந்தையிடம் வேதம் பயின்றார். அந்த கால கட்டத்தில் இவருக்கு காஞ்சி மடத்தில் இருந்து அழைப்பு வந்து,அங்கு சென்றார். அவருக்கு பால பெரியவா பட்டம் வழங்கப்பட்டது.

தான் படித்த பள்ளி புனரமைப்பு பணிக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கினார். வினோத் குமார் ஜெயின் தலைமையில் பள்ளி நூற்றாண்டு குழு நிர்வாகிகள் நேற்று காஞ்சி சங்கர மடத்துக்கு சென்று காசோலையை பெற்றுக்கொண்டனர்.

Updated On: 1 March 2022 1:01 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  3. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  4. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  5. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  6. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  7. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  8. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  9. காஞ்சிபுரம்
    அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!