/* */

ஆம்புலன்சில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள்

சேத்துப்பட்டு அருகே ஆம்புலன்சில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.

HIGHLIGHTS

ஆம்புலன்சில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள்
X

108   ஆம்புலன்ஸ் (பைல் படம்)

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே கூலித்தொழிலாளி பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.

சேத்துப்பட்டு அடுத்த மேல்வில்லிவனம் மதுரா சாமந்திபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை(35), விறகு வெட்டும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவரும் கணவருடன் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நிறை மாத கர்ப்பிணியாக இருந்த கிருஷ்ணவேணி நேற்று இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே 108 ஆம்புலன்சை வரவழைத்து சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் கிருஷ்ணவேணி சேர்க்கப்பட்டார். அங்கு செவிலியர் பிரசவம் பார்த்ததில் கிருஷ்ணவேணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

ஆனால், அவரது உடல் நிலை கருதி மேல்சிகிச்சைக்காக மீண்டும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சை டிரைவர் கோபிநாதன் ஓட்டி சென்றார். செல்லும் வழியில் அவலூர்பேட்டை அருகே கிருஷ்ணவேணிக்கு மீண்டும் பிரசவ வலி ஏற்படவே உதவியாளர் நாகராஜ் ஆம்புலன்ஸ்சை ஓரமாக நிறுத்தி பிரசவம் பார்த்தார். அப்போது, கிருஷ்ணவேணிக்கு மேலும் பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, தாய் கிருஷ்ணவேணி மற்றும் 2 பெண் குழந்தைகளை ஆம்புலன்சில் அழைத்து சென்று திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தாயும் சேயும் நலமுடன் இருக்கின்றனர்.

Updated On: 5 April 2024 10:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்