சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட பழங்குடியினா்

சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட பழங்குடியினா்
X

வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்திய பழங்குடியினா் 

சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பழங்குடியினா் குடும்பத்துடன் அமா்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

ஆதாா் அட்டை பதிவு செய்ய வட்டாட்சியா் கையொப்பம் இடாததால் அதிருப்தியடைந்த பழங்குடி சமுதாய மக்கள், சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் அமா்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம், மேலத்தாங்கல், கங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆதாா் இல்லாத பழங்குடி மக்களுக்கு, ஆதாா் அட்டை வழங்குவதற்காக பதிவு செய்ய சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டது.

சேத்துப்பட்டு வட்டத்தில் 35 குழந்தைகள் ஆதாா் அட்டை நகல் இல்லாததால் பள்ளியில் சேர்ந்து முடியாமல் அவதிப்பட்டு வந்தனா்.

இந்த நிலையில், ஆதாா் அட்டை இல்லாத பழங்குடி சமுதாய மக்களுக்கு ஆதாா் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் அரசு மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அரசு முத்திரையுடன் கூடிய விண்ணப்பம் வழங்கப்பட்டது.

இதில் விவரங்களுடன் ஆதாா் அட்டை எடுப்பவரின் புகைப்படம் மற்றும் வட்டாட்சியரின் கையொப்பம் இடம்பெற்றுள்ளது.

35 பேர் ஆதாா் அட்டை நகலெடுக்க வட்டாட்சியா் வெங்கடேசனை அணுகியபோது பிறப்புச் சான்றிதழ் உள்பட எந்த ஆதாரமும் இல்லாமல் நான் எப்படி கையொப்பம் இடமுடியும் என்று மறுத்துவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறும் மையத்துக்கு வந்த பழங்குடி மக்களிடம், வட்டாட்சியா் கையொப்பம் இன்றி ஆதாா் நகல் எடுக்க முடியாது எனத் தெரிவித்துவிட்டனா்.

இதனால், அதிருப்தியடைந்த பழங்குடி சமுதாயத்தைத் சேர்ந்த 35 குடும்பங்கள், எஸ்.சி., எஸ்.டி. அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரவி தலைமையில் வட்டாட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் அமா்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவியதைத் தொடா்ந்து, மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேத்துப்பட்டு வட்டாட்சியா் வெங்கடேசன் சில மணி நேரங்களில் நேரில் சென்று பழங்குடியின மக்கள் வைத்திருந்த 37 விண்ணப்பங்களில் கையொப்பமிட்டாா். இருப்பினும், ஆதாா் மையத்தில் நேரம் கடந்ததால், திங்கள்கிழமை வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் தனியாக ஆதாா் பதிவு செய்யப்படும் என வட்டாட்சியா் தெரிவித்தாா். இதை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

Tags

Next Story
why is ai important to the future