/* */

சேத்துப்பட்டில் கிணற்றில் வியாபாரி உடல் கண்டெடுப்பு

சேத்துப்பட்டில் இரண்டு நாட்களாக காணாமல் போன வியாபாரி கிணற்றில் சடலமாக மீட்பு

HIGHLIGHTS

சேத்துப்பட்டில்  கிணற்றில்  வியாபாரி உடல் கண்டெடுப்பு
X

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கடைத் தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 57). வியாபாரியான இவர் 2 நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் பாத்திமா தெருவில் உள்ள ராஜேந்திரன் என்பவருடைய நிலத்தில் குருமூர்த்தி இறந்து கிடப்பதாக சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக விரைந்து சென்ற போலீசார் கிணற்றில் கிடந்த குருமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அவரது மனைவி மகேஸ்வரி அளித்துள்ள புகாரில், கணவர் குருமூர்த்திக்கு நீச்சல் தெரியாது. எனவே அவர் தவறி விழுந்திருக்கலாம் என்று கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 Dec 2021 7:22 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்