திருவண்ணாமலை: சேத்துப்பட்டு பேரூராட்சி துணைத்தலைவர் ராஜினாமா

X
துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்த மங்கலம்.
By - S.R.V.Bala Reporter |15 March 2022 7:03 AM IST
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சி துணைத்தலைவர் மங்கலம் ராஜினாமா செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதையடுத்து நடந்த மறைமுக தேர்தலில் 12-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட மங்கலம் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தி.மு.க. சார்பில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 14-வது வார்டு உறுப்பினர் திலகவதி செல்வராஜன் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் மங்கலம் துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை செயல் அலுவலர் ரவிச்சந்திரபாபுவிடம் நேற்று அளித்தார். இந்த கடிதத்தை செயல் அலுவலர் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu