Begin typing your search above and press return to search.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
HIGHLIGHTS
போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் என்பதை சுட்டிக் காட்டுவதோடு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்