போளூர் துணை மின் நிலைய பகுதியில் நாளை மின் நிறுத்தம்

போளூர் துணை மின் நிலைய பகுதியில் நாளை மின் நிறுத்தம்
X

பைல் படம்.

மாதாந்திர பராமரிப்பு காரணமாக போளூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

நாளை மின்சாரம் தடை செய்யப்படும் இடங்கள் போளூர் நகரம், அத்திமூர், மண்டகொளத்தூர், ராந்தம், ஜடாதாரிகுப்பம், கலசபாக்கம், பெலாசூர், வாட்டர் ஒர்க்ஸ், ஆர்.குண்ணத்தூர், கொம்மனந்தல், முருகாபாடி மற்றும் போளூர் நகரை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த ‌தகவலை செயற்பொறியாளர் எஸ்.எஸ்.குமரன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
the future of ai in healthcare