/* */

ரயில்வே மேம்பால பணிகளை விரைவில் முடிக்க அமைச்சரிடம் மனு: போளூர் வியாபாரிகள் சங்கம் முடிவு

போளூரில் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் ரயில்வே மேம்பால பணிகள் விரைவில் முடிக்க அமைச்சரிடம் மனு அளிக்க முடிவு

HIGHLIGHTS

ரயில்வே மேம்பால பணிகளை விரைவில் முடிக்க அமைச்சரிடம் மனு:  போளூர் வியாபாரிகள் சங்கம் முடிவு
X

போளூரில்  நடைபெற்ற  தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம்

மேம்பால பணி விரைவில் முடிக்க கோரி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம் சங்கத் தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய வியாபாரிகள், ரயில்வே மேம்பால பணிகள் கடந்த நான்கு வருடங்களாக நடந்து வருவதாகவும் இதனால் வியாபாரிகள் பெறும் சிரமத்துக்கு உள்ளாவதால் இப்பணியின் விரைவில் முடிக்க வேண்டும்.

மேலும் இந்தப் பணி காலதாமதம் ஆவதால் போளுரை சுற்றியுள்ள ஹவுசிங் போர்டு, வெண்மணி, செங்குணம், முருகா பாடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் போளூர் நகரத்திற்கு வருவதற்கு பெரும் சிரமத்திற்கு உள்ளாகி மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது.

ரயில்வே மேம்பால பணி விரைவில் முடிக்கும் பட்சத்தில் இதற்கு தீர்வு ஏற்படும் என்று அனைவரும் கருத்து தெரிவித்ததன் அடிப்படையில் போளூர் ரயில்வே மேம்பால பணி விரைவில் முடிக்க கோரி நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ . வேலு மற்றும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை அளிப்பது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

போளூர் பேரூராட்சியில் நிலுவையில் உள்ள வரிகளை வியாபாரிகள் மார்ச் 31 செலுத்திட வேண்டும் என போளூர் ஊராட்சி ஒன்றியம் அறிவித்த நிலையில் அபராதங்களை தவிர்க்குமாறு வியாபாரிகளை கூட்டம் வலியுறுத்தியது.

மேலும் வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் பேருந்துகளின் ஊழியர்கள் போளூர் பைபாஸ் ரோட்டிலேயே இறக்கி விடுகின்றனர், இதனால் போளூர் நகருக்கு வரும் பயணிகள் மிகவும் பாதிப்படைகின்றனர் பேருந்துகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கண்டிப்பாக போளூர் நகருக்குள் வந்து செல்ல வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகளை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்கு வியாபாரிகள் சங்கத் துணைத் தலைவர் ஹரி , பொருளாளர் ராஜேஷ் குமார் , இணை செயலாளர் மகேந்திர குமார் மற்றும் நிர்வாகிகள், ரோட்டரி அரிமா சங்க நிர்வாகிகள், ரெட் கிராஸ் சங்க நிர்வாகி சுரேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 8 March 2023 10:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?