திருவண்ணாமலை மாவட்டம் படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நவராத்திரி விழா

திருவண்ணாமலை மாவட்டம் படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நவராத்திரி விழா

காமாட்சி அலங்காரத்தில் ரேணுகாம்பாள்

Navratri Festival -திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.

Navratri Festival - திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் கடந்த 26-ம்தேதி நவராத்திரி விழா தொடங்கியது. இதை முன்னிட்டு கோவில் மகா மண்டபத்தில் உற்சவ அம்மனை கொலு வைத்து நேற்று காமாட்சி அம்மன் அலங்காரம் நடைபெற்றது.

தினமும் காலை மாலை லட்சார்ச்சனை பூஜை நடக்கிறது. இதில் கலந்து கொண்டு வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசா தங்கள் வழங்கப்படுகிறது. நேற்று மாலை ஸ்ரீ மீனாட்சி நாட்டியக் குழு மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது.

நாட்டியக் குழுவினருக்கு கோவில் சார்பில் செயல் அலுவலர் சிவஞானம்,மேலாளர் மகாதேவன், கணக்கர் சீனிவாசன் ஆகியோர் சான்றிதழ்கள், பிரசாதங்கள் வழங்கினர். மேலும் நான்காம் நாளான நேற்று அம்மனுக்கு சிவலிங்க ஆலிங்கண பூஜை அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் மாணவிகளின் பரத நாட்டியம் நடைபெற்றது. மாணவிகளுக்கு செயல் அலுவலர் பரிசுகளை வழங்கினார் இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் க.பெ.அசோக்குமார் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் ஜோதிலட்சுமி செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து இருந்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story