/* */

போளூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு

போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

போளூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்  எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு
X

போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை பாக்கி உள்ளதாக, அவரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

மேலும், தாங்கள் கொண்டு வரும் வரும் நெல் மூட்டைகளை எடை போடுவதில் தாமதம் ஏற்படுவதாகவும், இதனால், வெளியே மழையிலும் வெயிலிலும் இருந்து நெல் மூட்டைகள் வீணாவதாக, விவசாயிகள் வேதனையோடு தெரிவித்தனர்.

நெல்மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு, இருப்பு அறை வேண்டும் என, எம்.எல்.ஏ.விடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். உடனடியாக இதை பரிசீலிப்பதாக கூறி, அங்கிருந்த அதிகாரிகளிடம் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யுமாறு, அக்ரி கிருஷ்ண மூர்த்தி கேட்டுக் கொண்டார்.

Updated On: 29 Jun 2021 9:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்