போளூரில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் விழிப்புணர்வு ஊர்வலம்

போளூரில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் விழிப்புணர்வு ஊர்வலம்
X

போளூரில் நடைபெற்ற மெகா கொரோன தடுப்பூசி முகாம் விழிப்புணர்வு பேரணி.

போளூர் பேரூராட்சியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பேரூராட்சியில் நாளை நடைபெற உள்ள மெகா கொரோனா தடுப்பூசி முகாமிற்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை வட்டாட்சியர் சண்முகம் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பேரூராட்சி அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய சாலை வழியாக சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

Tags

Next Story
why is ai important to the future