/* */

நெல் மூட்டைகளுடன் லாரி கிணற்றில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் காயம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா நல்லடிசேனை கிராமத்தில் லாரி கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

HIGHLIGHTS

நெல் மூட்டைகளுடன் லாரி கிணற்றில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் காயம்
X

நெல் மூட்டைகளுடன் கிணற்றில் கவிழ்ந்த லாரி. 

திண்டிவனத்தை சேர்ந்த வியாபாரிகள் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா நல்லடிசேனை கிராமத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து, அதை ஒரு லாரியில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

லாரியில் 2 சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் உடன் வந்தனர். நல்லடிசேனை கிராமம் அருகே சென்ற போது திடீரென சாலையோரம் இருந்த கிணற்றில் நெல் மூட்டைகளுடன் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் லாரி டிரைவர் பிரபு லேசான காயம் அடைந்தார்.

லாரியில் வந்த திண்டிவனத்தை சேர்ந்த சுமைத்தூக்கும் தொழிலாளர்களான குப்பன் (வயது 45), குமார் (46) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 3 பேரும் சேத்துப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேசூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நெல் மூட்டைகளுடன் கவிழ்ந்து கிடந்த லாரியை பார்வையிட்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 May 2022 1:35 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!