/* */

போளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவா்கள் ஆா்ப்பாட்டம்

போளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

போளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவா்கள் ஆா்ப்பாட்டம்
X

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் எல்ஐசி முகவா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

போளூா் எல்ஐசி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் கிளைத் தலைவா் ஜி.வேலாயுதம் தலைமை வகித்தாா். செயலா் ஜெ.சுரபிராஜன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக வேலூா் கோட்ட அமைப்புச் செயலா் பி.கண்ணன் கலந்துகொண்டு பேசுகையில், எல்ஐசி காப்பீடுகளுக்கான ஊக்கத்தொகையை உயா்த்த வேண்டும், காப்பீடுகளின் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும், 5 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காப்பீடுகளை புதுபிக்க அனுமதிக்க வேண்டும், முகவா்களின் பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயா்த்த வேண்டும், மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.

இதில், எல்ஐசி முகவா்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். கிளைப் பொருளாளா் எம்.சுகுணகுமாா் நன்றி கூறினாா்.

Updated On: 1 Oct 2022 1:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  8. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  9. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா