/* */

போளூர் அருகே மின் கசிவினால் குடிசை வீடு எரிந்து சாம்பல்

போளூர் அருகே, வெயில் மற்றும் மின்கசிவு காரணமாகவும் குடிசை வீடு எரிந்து சாம்பல் ஆனது.

HIGHLIGHTS

போளூர் அருகே மின் கசிவினால் குடிசை வீடு எரிந்து சாம்பல்
X

தீ விபத்தில் எரிந்த வீடு.

படவேடு அருகே ராமநாதபுரம் கிராமத்தில், கருப்பன் என்பவரும் அவரது மனைவி காசியம்மாள் ஒரு அறையிலும், மகன் ஜெயபால், மருமகள் தரணி, வாய் பேச முடியாத 2 குழந்தைகளுடன் மற்றொரு அறையிலும் குடிசை வீட்டில் இருந்துள்ளனர்.

இன்று பகலில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாகவும் மின்கசிவு காரணமாகவும் திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். வீட்டில் நகை விற்று நிலம் வாங்குவதற்காக வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் மற்றும் பொருட்கள், மின் சாதனப் பொருட்கள் எரிந்து நாசமாகின.

தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் சம்பத், படவேடு ஊராட்சி தலைவர் சீனிவாசன், துணைத்தலைவர் தாமரைச்செல்வி ஆனந்தன் ஆகியோர் சம்பந்தப்பட்ட காசியம்மாள், ஜெயபால் ஆகியோரை அழைத்து அவர்களுக்கு வேட்டி, சேலை, உணவு பொருட்கள் பிளாஸ்டிக் குடங்கள் போன்றவற்றை வழங்கினார். மேலும் போளூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Updated On: 3 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா... குளிக்கிறதுல இவ்ளோ விஷயம் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    சொல்லி அடிக்கும் கில்லி பெண்கள்..! சாதனை மங்கைகள்..!
  3. உலகம்
    டெஸ்லாவில் அதிரடி: மூத்த நிர்வாகிகளை திடீர் பணிநீக்கம்
  4. திருப்பூர்
    திருப்பூா் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை
  5. அவினாசி
    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறப்பு
  6. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  7. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  8. வீடியோ
    Happy Birthday Hitman🥳🎂 ! #rohitsharma #rohit #hitman #happy...
  9. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  10. ஈரோடு
    ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் டிஜிட்டல் திரை கோளாறு: ஆட்சியர்...