/* */

நகைக்காக வயதான பெண்ணை கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடுகின்றனர்

மூதாட்டி அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பியுள்ளனர்

HIGHLIGHTS

நகைக்காக வயதான பெண்ணை கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடுகின்றனர்
X

போளூர் அடுத்த புலிவானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் காசி அம்மாள் (வயது 85). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். மகன் சின்ன பையனுடன் வசித்து வந்தார். இவர்களது விவசாய நிலம் அந்தப் பகுதி ஏரிக்கரை ஓரம் உள்ளது. நிலத்திற்கு எதிரே உள்ள சமுதாயக்கூடத்தில் காசியம்மாள் தினமும் இரவில் படுத்து உறங்குவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று அதிகாலை மூதாட்டி அங்கு ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தார்.அதிகாலையில் அவரது மகன் வந்து காசி அம்மாளை பார்த்தார். அப்போது மூதாட்டி அணிந்திருந்த நகைக்காக மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2 Sep 2022 1:52 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?