போளூரில் கார்- லாரி விபத்தில் கிரிவலம் சென்று திரும்பிய டிரைவர் பலி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேலப்பட்டு பகுதி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் சேகர் (வயது 68), காவேரி (65), ராம்பிரகாஷ் (28), மோகனப்பிரியா (26). இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு காரில் சென்றனர்.
காரை ரமேஷ் என்பவர் ஓட்டினார். கிரிவலம் சென்று விட்டு மீண்டும் திருவண்ணாமலையிலிருந்து வேலூர் நோக்கி வந்தனர். அப்போது வெண்மணி என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த சரக்கு லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த 2 பேரை போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து போளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu