திருவண்ணாமலையில் நெல் மூட்டைகள் நேரடி கொள்முதல்: விவசாயிகள் மகிழ்ச்சி

X
By - S.R.V.Bala Reporter |8 Aug 2021 11:18 AM IST
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் விற்பனை விவசாயிகள் மகிழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் விற்பனை விவசாயிகள் மகிழ்ச்சி
போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு போளூர் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து 2016 விவசாயிகள் 54,819 நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
அவ்வாறு கொண்டு வந்த நெல் மூட்டைகளை கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை உட்பட 14 ஊர்களில் இருந்து வந்த வியாபாரிகள் கொள்முதல் செய்து அதற்கான பணம் 6 கோடியே 43 லட்சம் ரூபாயை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தினர்.
வியாபாரிகளிடம் பெறப்பட்ட பணத்தை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் கண்காணித்து அவர்கள் கணக்கில் ஒழுங்காக பணம் சேர்கிறதா என கண்காணித்தார். இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu