/* */

போலீசார் பறிமுதல் செய்த மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் அழிப்பு

போலீசார் பறிமுதல் செய்த 6059 மதுபாட்டில்கள் மீது ரோடு ரோலரை ஏற்றி நசுக்கி அழித்தனர்.

HIGHLIGHTS

போலீசார் பறிமுதல் செய்த  மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் அழிப்பு
X

போளூரில்   ரோடு ரோலரை ஏற்றி நசுக்கி அழிக்கப்பட்ட போலீஸார் பறிமுதல் செய்த மதுபாட்டில்கள்

போளூரில் 6059, மதுபான பாட்டில்கள் ரோடு ரோலர் இயந்திரம் மூலம் நசுக்கி அழிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் மற்றும் ஆரணி பல்வேறு இடங்களில் மதுபாட்டில்களை முறைகேடாக கடத்தி விற்பனை செய்தவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கடந்த ஓராண்டில் மது கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய பலரை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்த 6059 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்குகள் விசாரணைக்கு பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அழிப்பதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அழிப்பதற்காக அவற்றை லாரியில் ஏற்றிய மதுவிலக்கு போலீசார், கரைபூண்டி ஆற்றுப்படுகையில் அங்கு மதுபாட்டில்களை வரிசையாக அடுக்கி வைத்தனர். தொடர்ந்து டிஎஸ் பி ராஜன் , முன்னிலையில், மதுபாட்டில்கள் மீது ரோடு ரோலரை இயக்கி உடைத்து அழித்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் உடைக்கப்பட்டதால், அங்கு மது ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

Updated On: 2 March 2022 6:20 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஜப்பானில் பரவும் சதை உண்ணும் பாக்டீரியாக்கள்! இரண்டு நாட்களில்...
  2. Trending Today News
    காற்றில் டைவ் அடித்த திமிங்கலம்..! வீடியோ வைரல்..! (செய்திக்குள்...
  3. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 42.63 அடியாக சரிவு
  4. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டியில் யோகாசனம் செய்து நோவா உலக சாதனை
  5. ஈரோடு
    பவானி அருகே ஆம்னி காரில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர்
  6. நாமக்கல்
    நாமக்கல் வாரச்சந்தையில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மண்டை ஓடுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த காரால்...
  8. ஈரோடு
    6 மாதத்தில் பிறந்த அரை கிலோ குழந்தை.. தீவிர சிகிச்சையில் 6 கிலோவாக...
  9. திருவள்ளூர்
    நிலத்தை தருவதாக ரூ.25 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டவர் எஸ்.பி.,யிடம்...
  10. ஈரோடு
    திரைப்பட வசனத்தை மேற்கோள் காட்டி பேசிய மாவட்ட முதன்மை நீதிபதி