/* */

நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளித்த பேரூராட்சி மன்ற தலைவர்

போளூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு வருகை தந்த ஆரணி நாடாளுமன்ற உறுப்பினரிடம் பேரூராட்சி மன்ற தலைவர் கோரிக்கை மனு அளித்தார்.

HIGHLIGHTS

நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளித்த பேரூராட்சி மன்ற தலைவர்
X

கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட விஷ்ணு பிரசாத் எம்.பி, உடன் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்.

போளூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு வருகை தந்த ஆரணி மக்களவைத் தொகுதி உறுப்பினர் விஷ்ணு பிரசாத் இடம் பேரூராட்சி மன்ற தலைவர் ராணி சண்முகம் தலைமையிலான உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் போளூர் வழியாக வாரத்தில் மூன்று நாட்கள் செல்லும் மும்பை தாகூர் ரயிலை தினசரி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் போளூர் ரயில்வே நிலையத்தில் திருப்பதி மன்னார்குடி ரயில் , ராமேஸ்வரம் திருப்பதி விரைவு ரயில் , புதுச்சேரி ஹவுரா விரைவு ரயில் ஆகிய ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூர் வேலூர் கண்டோன்மென்ட் ரயிலை போளூர் வழியாக தினசரி இயக்க வேண்டும். போளூர் தபால் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு போளூர் வழியாக தினசரி ரயில் இயக்க வேண்டும்.

என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினரிடம் போளூர் பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Updated On: 9 Dec 2022 1:18 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  3. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  4. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...