போளுரில் பைக் திருடிய பலே ஆசாமி கைது

போளுரில் பைக் திருடிய பலே ஆசாமி கைது
X

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்

போளூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டு, 6 பைக்குகள் மீட்கப்பட்டன

போளூரை அடுத்த புலிவானந்தல் கிராமத்தை சேர்ந்த அரிக்குமார், மண்டகொளத்தூரை சேர்ந்த ராஜேந்திரன், மாரிமுத்து ஆகிய 3 பேரின் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது.

இது குறித்து போளூர் போலீசார் தனித்தனி வழக்குகள் பதிவு செய்தனர். போளூர் துணை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ஜமுனாமரத்தூர் நம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜா (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 6 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ai healthcare technology