Begin typing your search above and press return to search.
குழந்தைகள் புற்று நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரிமா சங்கத்தின் சார்பில் குழந்தைகள் புற்று நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவில் அரிமா சங்கம் சார்பில் குழந்தைகள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் லயன் டாக்டர் சுகந்தி அன்பரசு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி புற்றுநோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கத் தலைவர் திருமுகம், மாவட்ட தலைவர் அன்பரசு, சுரேஷ் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.