/* */

போளூர் அருகே ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடர்பாக உதவி ஆட்சியர் ஆய்வு

போளூர் அருகே எட்டிவாடி ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க கட்டுமான பணிக்கு தேவைப்படும் பரப்பளவு குறித்து கள ஆய்வு மேற்கொண்ட உதவி ஆட்சியர்

HIGHLIGHTS

போளூர் அருகே ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடர்பாக உதவி ஆட்சியர் ஆய்வு
X

மேம்பால கட்டுமான பணிக்கு தேவைப்படும் பரப்பளவு குறித்து கள ஆய்வு மேற்கொண்ட உதவி ஆட்சியர் 

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் போளூர் - வேலூர் சாலையில் எட்டிவாடி ரயில்வே கேட் உள்ளது. அவ்வழியாக ரயில்கள் செல்லும் போது நீண்ட நேரம் ரயில்வே கேட் மூடப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் ரயில்வே கேட் பகுதியில் மேம் பாலம் கட்டுவதற்கான திட்ட வடிவமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாலம் அமையும் இடம் வனத்துறைக்கு சொந்தமான பகுதியாக இருப்பதால் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு நில வகை மாற்றம் செய்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக ஆய்வு பணி மேற்கொண்டு அறிக்கை அளிக்கும்படி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வருவாய் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதன்பேரில் ஆரணி உதவி ஆட்சியர் கவிதா, போளூர் தாசில்தார் சண்முகம், மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் சாலையின் இருபுறமும் கட்டுமான பணிக்கு தேவைப்படும் பரப்பளவு குறித்து கள ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்படும் என உதவி ஆட்சியர் தெரிவித்தார்

Updated On: 9 Sep 2021 7:44 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்