/* */

மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது

மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

மைனர் பெண்ணை கடத்தி   திருமணம் செய்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
X

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த சேங்கபுத்தேரி கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் 12-ம் வகுப்பு படித்துவிட்டு போளூரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். வழக்கம் போல் காலையில் வேலைக்கு சென்று மாலை வீடு திரும்புவார். கடந்த 23-ந் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் மாலை அவர் வீ்ட்டுக்கு வராததால் பல இடங்களில் அவரது தந்தை தேடினார். பின்னர் இதுகுறித்து போளூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வந்தனர்.

இ்ந்த நிலையில் போளூர் அருகே சீனந்தல் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்ற சின்னராஜ் (வயது 24) என்ற பொக்லைன் டிரைவர் இளம்பெண்ணை கடத்தி சென்று கடந்த 30-ந்தேதி கோவிலில் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து மைனர் பெண்ணை கடத்தி சென்றதாக இன்று முருகேசனை போலீசார் கைது செய்தனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

Updated On: 2 Aug 2022 7:42 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  5. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  6. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  7. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  8. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  9. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!