/* */

சிறுமியிடம் பாலியல் கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

POCSO Act in Tamil -சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

HIGHLIGHTS

சிறுமியிடம் பாலியல் கொடுமை செய்த  வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
X

POCSO Act in Tamil - திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கஸ்தாம்பாடி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 27). இவர் கடந்த 2018-ம் ஆண்டு 6 வயதுடைய சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்து உள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆரணி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர். மகேந்திரன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உறவினர் ஆவார்.

இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார்.

அப்போது சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட மகேந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து மகேந்திரனை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 Sep 2022 9:17 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  2. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  4. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  6. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  7. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  8. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  10. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!