/* */

14 வயது சிறுமி கர்ப்பம்: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

திருவண்ணாமலை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.

HIGHLIGHTS

14 வயது சிறுமி கர்ப்பம்: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 21). இவர், 7-ம் வகுப்பு படிக்கும் 14 வயதுடைய சிறுமியை காதலித்ததாகவும், ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமி சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியை மீட்டு திருவண்ணாமலையில் உள்ள வரவேற்பு இல்லத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை தேடி வருகின்றனர்.

Updated On: 10 Jun 2022 9:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...