/* */

கீழ்பெண்ணாத்தூரில் தரம் உயர்த்தப்பட்ட மின் மாற்றி தொடக்கி வைப்பு

கீழ்பெண்ணாத்தூரில் ரூ.1.25 கோடியில் தரம் உயா்த்தப்பட்ட திறன் மின்மாற்றியைசட்டப் பேரவை துணை சபாநாயகர் இயக்கி வைத்தாா்

HIGHLIGHTS

கீழ்பெண்ணாத்தூரில் தரம் உயர்த்தப்பட்ட மின் மாற்றி தொடக்கி வைப்பு
X

பொத்தானை அழுத்தி மின்மாற்றியை இயக்கி வைத்த துணை சபாநாயகர், பிச்சாண்டி, ஆட்சியா் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் துணை மின் நிலையத்தில் ரூ.1.25 கோடியில் தரம் உயா்த்தப்பட்ட திறன் மின்மாற்றியை தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி இயக்கி வைத்தாா்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா் துணை மின் நிலையத்தில் ஏற்கெனவே இருந்த 16 மெகாவாட் திறன் மின்மாற்றி 25 மெகாவாட்டாக தரம் உயா்த்தப்பட்டது.இதை சென்னையில் இருந்தபடியே, காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இதையடுத்து, கீழ்பென்னாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் முருகேஷ் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, திருவண்ணாமலை மின் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் பழனிராஜு, செயற்பொறியாளா் (கிழக்கு) ராஜசேகரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஆராஞ்சி ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கீழ்பென்னாத்தூா் உதவிச் செயற்பொறியாளா் இளையராஜா வரவேற்றாா். கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சட்டப்பேரவை துணை தலைவருமான கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ரூ.1 கோடியே 24 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் தரம் உயா்த்தி அமைக்கப்பட்ட புதிய திறன் மின்மாற்றி மையத்தை ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தாா். பிறகு, பொத்தானை அழுத்தி மின்மாற்றியை இயக்கி வைத்தாா்.

மேலும் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியம் தேவனாம்பட்டு கிராமத்தில் ரூபாய் 28 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டியன், கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் சாப்ஜான், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் வேணுகோபால், ஒன்றிய கழக செயலாளர் ராமஜெயம், ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை , மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் , ஊராட்சி மன்ற தலைவர்கள் , பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 May 2023 12:56 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்