/* */

ஏரியை ஆக்கிரமித்து சாகுபடி செய்திருந்த நெல், கரும்புகள் அகற்றம்

ஆராஞ்சி ஏரியை ஆக்கிரமித்து 40 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெல், கரும்பு அகற்றப்பட்டது.

HIGHLIGHTS

ஏரியை ஆக்கிரமித்து சாகுபடி செய்திருந்த நெல், கரும்புகள் அகற்றம்
X

நாரையூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆராஞ்சி ஊராட்சியில் உள்ள ஏரி 97 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். அந்த ஏரி ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

அந்த ஏரியில் 40 ஏக்கர் பரப்பளவை அக்கம் பக்கத்தில் நிலம் வைத்திருப்போர் ஆக்கிரமித்து நெல், கரும்பு சாகுபடி செய்து வந்தனர். நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டதன்பேரில், கீழ்பென்னாத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலட்சுமி, ஆராஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் விஜயாசேகர் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

40 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெல், கரும்பு ஆகியவை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. அப்போது வட்ட சார் ஆய்வாளர் முனியன், சார் ஆய்வாளர் நாராயணன், ஊராட்சி செயலாளர் சுகுணா ஆகியோர் உடனிருந்தனர்.

அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா நாரையூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

Updated On: 27 April 2022 1:41 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்