/* */

கீழ் பென்னாத்தூரில் புறம்போக்கு இடத்தில் இருந்த கோவில் அகற்றம்

கீழ்பென்னாத்தூர் அருகே அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டு இருந்த கோவில் அகற்றப்பட்டது.

HIGHLIGHTS

கீழ் பென்னாத்தூரில் புறம்போக்கு இடத்தில்  இருந்த கோவில் அகற்றம்
X

கீழ் பென்னாத்தூரில் ஆக்கிரமிப்பு கோவில் அகற்றப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் தனலட்சுமி நகரில் பழமையான கன்னிமார் கோவில் உள்ளது. அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டிருந்த இந்த கோவிலை சுற்றிலும் சமீபத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு கும்பாபிஷேகம் நடந்ததாக கூறப்படுகிறது.

அரசு புறம்போக்கு இடத்தில் கோவில் கட்டப்பட்டு இருந்ததால் திருவண்ணாமலை வருவாய்த்துறை புகாரின் பேரில் திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜன், சின்ராஜ், குணசேகர், கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் பாதுகாப்புடன் கோவில் மற்றும் சுற்றுச்சுவர் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

அப்போது திருவண்ணாமலை தாசில்தார் சுரேஷ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 20 April 2022 12:35 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  4. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  5. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  6. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  7. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!