/* */

மயானப்பாதை வசதி கேட்டு திருவண்ணாமலையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ,மயானப்பாதை வசதி கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

மயானப்பாதை வசதி கேட்டு திருவண்ணாமலையில்  பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
X

மயானப்பாதை வசதி கேட்டு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆங்குணம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பள்ளி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். அதன் பிறகு அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமத்தில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நாங்கள் மயானப்பாதையின்றி அவதிப்படுகிறோம். எங்களில் யாரேனும் இறந்தால் அடக்கம் செய்ய போதுமான இடவசதி இல்லாமல் உள்ளது.

இறந்தவர்களின் உடல்களை பிறர் நிலத்தின் வழியே எடுத்துச்செல்லும் நிலை உள்ளது. எனவே எங்களுக்கு மயானப்பாதை வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும்.

கிராமத்தில் குடிநீர் வசதி இல்லாமலும் அவதிப்படுகிறோம். குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக வீடு கட்டி வாழ்ந்து வரும் எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 26 April 2022 7:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  4. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  7. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  8. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  9. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  10. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்