/* */

செங்கம், கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

செங்கம், கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

செங்கம், கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
X

கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.

செங்கம், கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா, நெகிழி பைகள் பயன்படுத்தப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

கீழ்பெண்ணாத்தூரில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள், புகையிலை பொருட்கள் டீ கப்புகள் பயன்படுத்தப்படுகிறதா என உதவி ஆய்வாளர், வட்டார ஆரம்ப சுகாதார மேற்பார்வையாளர் சதீஷ் பாபு தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் உதவி ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளா், தூய்மைப் பணியாளா்கள் நகரில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்

திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூர் சாலையில் உள்ள பேருந்து நிலையம் தாலுக்கா அலுவலகம் , பதிவுத்துறை அலுவலகம் கடைவீதிகள் உணவகம் மளிகை கடை உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது மேலும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது தொடர்ந்து நெகிழி பயன்பாடுகள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பயன்பாடுகள் குறித்து கண்காணிக்கப்படும் என சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் எச்சரித்தார்.

செங்கம்

செங்கம் பேரூராட்சி நிா்வாகத்துக்கு உள்பட்ட பகுதியில் வணிகா்கள், பொதுமக்கள் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள், டீ கப்புகளை பயன்படுத்தி வருவதாக வந்த புகாரின் பேரில், பேரூராட்சி செயல் அலுவலா் லோகநாதன் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளா் சொக்கநாதன் தலைமையில் துப்புரவு ஆய்வாளா், தூய்மைப் பணியாளா்கள் நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்த கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் துக்காப்பேட்டை, புதிய பேருந்து நிலையம், பெங்களூரு சாலை, பழைய பேருந்து நிலையம், கடைவீதி, இராஜ வீதி ஆகிய இடங்களில் மளிகைக் கடை, உணவகம், காய், கனி கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு சுமாா் 170 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடை உரிமையாளா்கள் ரூ.8 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து, நெகிழிப் பயன்பாடுகள் குறித்து கண்காணிக்கப்பட்டு பயன்படுத்தும் கடை உரிமையாளா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலா் எச்சரித்தாா்.

Updated On: 27 May 2023 1:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்