திருவண்ணாமலை மாவட்டத்தில் நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில்   நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு
X

மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய துணை சபாநாயகர்

New Ration Shop Building Inauguration திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், டி.கல்லேரி ஊராட்சிக்கு உட் பட்ட சமுக்குடையாம்பட்டு கிராமத்தில் புதிய நியாய விலை கடை கட்டிடத்தை துணை சபாநாயகர் திறந்து வைத்தார்.

New Ration Shop Building Inauguration

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், டி.கல்லேரி ஊராட்சிக்கு உள்பட்ட சமுக்குடையாம்பட்டு கிராமத்தில்திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், டி.கல்லேரி ஊராட்சிக்கு உள்பட்ட சமுக்குடையாம்பட்டு கிராமத்தில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டடம் திறந்துவைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா் மாரிமுத்து தலைமை வகித்தாா்.ஒன்றியக் குழுத் தலைவா் கலைவாணி கலைமணி, ஆணையா் பிரித்திவிராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஞானசௌந்தரி மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

டி.கல்லேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கச் செயலா் பழனியப்பன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு, நியாய விலைக் கடை கட்டடத்தை திறந்துவைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கினாா்.

இதில் கீழ்பென்னாத்தூா் ஒன்றியக்குழுத் தலைவா் அய்யாகண்ணு, வட்ட வழங்கல் அலுவலா் துரைராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ராஜேந்திரன் சிவகாமி கணேசன், ஊராட்சி மன்றத் தலைவா் சம்பத் துணைத் தலைவா் நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, டி.கல்லேரி ஊராட்சிக்கு உள்பட்ட ஆதிதிராவிடா் காலனியில் காத்திருப்போா் கூடத்திற்கு அடிக்கல் நாட்டினாா். பின்னா், அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தும், ரூ.6.50 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியையும் கு.பிச்சாண்டி திறந்துவைத்தாா்.

தொடர்ந்து கீழ்பெண்ணாத்தூர் தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியம் சொரகுளத்தூர் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture