/* */

மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் கட்டிட தொழிலாளி உயிரிழப்பு

கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

HIGHLIGHTS

மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் கட்டிட தொழிலாளி உயிரிழப்பு
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராஜாதோப்பு கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சாவித்திரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று சோ.கீழ்நாச்சிப்பட்டில் வசிக்கும் லோகு என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் நேற்று 1-வது மாடியில் கட்டுமான பணியில் ஈடுபட்டார்.

அப்போது திடீரென சாவித்திரி 1- வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயமடைந்த சாவித்திரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு சென்றனர். செஞ்சி அருகே சென்றபோது சாவித்திரிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவரை செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சாவித்திரியின் மகன் ஏழுமலை கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் உபயதுல்லாகான் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 20 Jun 2022 1:41 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?