/* */

கீழ்பென்னாத்தூர் அருகே நேரடி கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி விவசாயிகள் போராட்டம்

கீழ்பென்னாத்தூர் அருகே ராஜந்தாங்கல் கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் போராட்டம்.

HIGHLIGHTS

கீழ்பென்னாத்தூர் அருகே நேரடி கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி விவசாயிகள் போராட்டம்
X

ராஜந்தாங்கல் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கீழ்பென்னாத்தூர் அருகில் ராஜந்தாங்கல் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இதில் பணியாற்றி வந்தவர் விவசாயி ஒருவரிடம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து அந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது.

இந்தநிலையில் இன்று அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் 20-க்கும் மேற்பட்டவர்கள் மூடப்பட்ட ராஜந்தாங்கல் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் அங்கேயே சாப்பாடு வாங்கி வந்து சாப்பிட்டனர். பின்னர் அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Updated On: 30 April 2022 6:37 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...