/* */

காவு வாங்கும் தாழ்வான மின்கம்பிகள்: உயர்த்தி அமைக்க விவசாயிகள் கோரிக்கை

கீழ்பென்னாத்தூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

காவு வாங்கும் தாழ்வான மின்கம்பிகள்: உயர்த்தி அமைக்க விவசாயிகள் கோரிக்கை
X

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் சக்கரை ,சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பன்னீர்செல்வம், ஊராட்சி ஒன்றிய ஆணையர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய விவசாயிகள், கீழ்பெண்ணாத்தூர் வட்டத்தில் தற்போது கரும்பு அறுவடை நடைபெற்று வருகிறது .எனவே விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கான விவரத்தை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினார் . அதை அடுத்து பேசிய அதிகாரிகள் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

Updated On: 19 May 2022 8:01 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  2. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  3. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  4. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  5. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  6. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  8. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  9. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை