/* */

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் ஆய்வு

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில், மழையினால் சேதமடைந்த பகுதிகளை, தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் ஆய்வு
X

அண்டம்பள்ளம் கிராமத்தில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட, துணை சபாநாயகர் பிச்சாண்டி.

திருவண்ணாமலை ஒன்றியம், கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், மழை பாதிப்புகளை சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஆய்வு செய்தார். அண்டம்பள்ளம் கிராமத்தில் உள்ள ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர், நாரையூர் கிராமத்தில் கன மழையினால் வீடுகள் சேதம் அடைந்தவர்களுக்கு அரிசி மற்றும் சமையல் பொருட்களை வழங்கினார்.

வேட்டவலம் பேரூராட்சியில் கன மழையினால் சேதமடைந்த வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்க, வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நுக்காம்பாடி கிராமத்தில் ஆய்வு செய்த போது, அங்கு இருந்த விவசாயிகள், பயிர்கள் சேதம் அடைந்ததைக்கூறி, நிவாரண தொகை வழங்க கேட்டுக்கொண்டனர்.

அப்போது அதிகாரிகளிடம், இவர்களுக்குரிய பயிர்ச்சேத மதிப்பை மதிப்பீடு செய்து, உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்குஉத்தரவிட்டார்.ஆய்வின்போது வேளாண்மைத்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் உடனிருந்தனர்.

Updated On: 22 Nov 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு