பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய துணை சபாநாயகர்!

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய துணை சபாநாயகர்!

மாணவ மாணவிகளுக்கு விலையில்லா  மிதிவண்டிகளை வழங்கிய துணை சபாநாயகர்

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டப்பேரவை துணை சபாநாயகர் வழங்கினார்

துரிஞ்சாபுரம் அடுத்த மங்கலம், வேடந்தவாடி, ஆகிய ஊராட்சிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 330 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த மங்கலம், வேடந்தவாடி, ஆகிய ஊராட்சிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அண்ணாமலை, ஒன்றிய குழு துணைத் தலைவர் உஷாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் விலையில்லா மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கி துணை சபாநாயகர் பேசியதாவது;

மாணவர்கள் நல்ல முறையில் படிப்பதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பலர் திட்டங்களை தினம் வழங்கி வருகிறார். அதில் பெண் பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதந்தோறும் ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆண் பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்கு தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதந்தோறும் ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் சிறந்த முறையில் படிப்பதற்காக இல்லம் தேடி கல்வி கற்றல் கற்பித்தல் நான் முதல்வன் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் படிக்கும் மாணவர்களுக்காக முதலமைச்சர் என்றென்றும் வழங்கி வருகிறார்.

அதேபோல் படிக்கும் மாணவர்களுக்கு இலவச சீருடை பாட புத்தகங்கள் விலையில்லா மிதிவண்டி போன்ற திட்டங்களில் எண்ணற்ற சலுகைகளும் வழங்கி வருகிறார். அதேபோல் இந்த மங்களம் மற்றும் வேடந்தவாடி ஊராட்சிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 330 மாணவ மாணவிகளுக்கு விலை யில்லா மிதிவண்டியை இப்போது வழங்கி உள்ளோம். இதன் மூலம் தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு இந்த பள்ளியில் உள்ள 11 ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மிதிவண்டி வழங்கி அதன் மூலம் மிதிவண்டியில் சிரமம்யின்றி வருவதற்கு இந்த மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது என நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பேசினார்.

விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ,தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ,மாணவ மாணவிகள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் ,அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story