/* */

நள்ளிரவில் மேரிமாதா சிலை உடைப்பு

கீழ்பென்னாத்தூரில் நள்ளிரவில் மேரிமாதா சிலை உடைக்கப்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

HIGHLIGHTS

நள்ளிரவில் மேரிமாதா சிலை உடைப்பு
X

சேதப்படுத்தப்பட்ட  மேரிமாதா சிலை.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் கருங்காலிகுப்பம் சாலை அருகில் உள்ள அந்தோணியார் தெருவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மேரி மாதா சிலை அமைக்கப்பட்டு அந்தப்பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் தினமும் வழிபட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் மேரி மாதா சிலையை உடைத்துள்ளனர். மேலும் அதன் அருகில் சாலையோரம் வசிக்கும் முருகன் என்பவர் நிறுத்தி வைத்திருந்த காரின் கண்ணாடிகள் மற்றும் இன்டிகேட்டர்கள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டிருந்தது. காலை அந்த பகுதிக்கு வந்த பொதுமக்கள் மேரி மாதா சிலை உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்தப்பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்ததில் ஒருவர் சிலையை சேதப்படுத்தியது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் மாதா சிலையை உடைத்தது கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள நாரியமங்கலம் கிராமத்தை சேர்ந்த விஜி (வயது 39) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து விஜியை போலீசார் கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும், குடிபோதையில் சிலையை சேதப்படுத்தியதாகவும், கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதையும் ஒப்புக்கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி ஆகியோர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 14 Feb 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  3. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  6. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  9. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  10. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!