/* */

வெறையூர் அருகே பஸ் - லாரி நேருக்கு நேர் மோதல்: 4 பேர் படுகாயம்

திருவண்ணாமலை மாவட்டம், வெறையூர் அருகே பஸ் - லாரி நேருக்குநேர் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

வெறையூர் அருகே பஸ் - லாரி நேருக்கு நேர் மோதல்: 4 பேர் படுகாயம்
X

பைல் படம்.

திருச்சி பகுதியில் இருந்து வேலூரை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சை வேலூர் மாவட்டம் கரிவேடு கிராமத்தைச் சேர்ந்த மோகன் (வயது 59) ஓட்டி வந்தார். அந்தப் பஸ்சில் கண்டக்டராக வேலூர் மாவட்டம் பெரியஅல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (50) இருந்தார். பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்திருந்தனர்.

அந்த வழியாக எதிரே திருவண்ணாமலை பகுதியில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி திருக்கோவிலூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. வெறையூர் அருகே கொளக்குடி அம்மன் நகர் இடத்தில் வந்தபோது பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டன.

அதில், பஸ் டிரைவர் மோகன், கண்டக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் பயணிகள் வேலூரைச் சேர்ந்த ரோசம்மாள் (73) மற்றும் லாரி டிரைவர் விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் (45) என 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வெறையூர் போலீசார் விரைந்து வந்து, விபத்தில் சிக்கிய 4 பேரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 April 2022 12:39 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு
  2. நாமக்கல்
    வீடு ஒதுக்கீடு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா வங்கிக் கடன்:...
  3. போளூர்
    நான்கு வழிச்சாலை திட்டங்கள் கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக் கூட்டம்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு மீண்டும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள்:...
  8. நாமக்கல்
    விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து மானியத்திட்டங்கள் பெற அழைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  10. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...