/* */

தாங்களாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கிராம மக்கள்!

திருவண்ணாமலை மாவட்டம் மட்டவெட்டு கிராம மக்கள் தாங்களாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

HIGHLIGHTS

தாங்களாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கிராம மக்கள்!
X

தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மட்டவெட்டு கிராம மக்கள்

இரண்டாம் அலை காரணமாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை அடுத்து மட்டவெட்டு கிராமத்தில்பொதுமக்கள் அனைவரும் தொற்று பரிசோதனை மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு தயக்கம் காட்டி வந்தனர்.

கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் கௌதம்ராம் தலைமையிலான மருத்துவ குழுவினர் உதவி மருத்துவர் தேன்மொழி தலைமையில் பொதுமக்களுக்கு தொற்று பரிசோதனை மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணலதாராமு முதலாவதாக தடுப்பு ஊசியை போட்டுக்கொண்டார். அதன்பின் அந்த கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் தாமாக முன்வந்து தங்களுக்கு தொற்று பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 19 May 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...