/* */

திருவண்ணாமலை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

திருவண்ணாமலை வடக்கு தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்களை விளக்கி அமைச்சர் வேலு பேசினார்

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
X

கருணாநிதி நூற்றாண்டு விழா வருடம் முழுவதும் கொண்டாடப்படும் என திருவண்ணாமலை வடக்கு தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்களை விளக்கி அமைச்சர் வேலு பேசினார்

கருணாநிதி நூற்றாண்டு விழா வருடம் முழுவதும் கொண்டாடப்படும் என திருவண்ணாமலை வடக்கு தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்களை விளக்கி அமைச்சர் வேலு பேசினார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காஞ்சிபுரம் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை தெற்கு வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட அவை தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, வடக்கு மாவட்ட அமைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வடக்கு மாவட்ட கழக செயலாளர் தரணி வேந்தன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு தீர்மானங்களை விளக்கி பேசினார்.

அவர் பேசுகையில், ஓய்வில்லா சூரியன் தனது 94 ஆண்டு ஆயுட்காலத்தில் 80 ஆண்டு கால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர், ஒரு நூற்றாண்டு கால திராவிட இயக்க வரலாற்றில் முக்கால் நூற்றாண்டு கால பங்களிப்பாளர், அரை நூற்றாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்து தமிழ்நாடு அரசியலின் அச்சாணியாக செயல்பட்டவர், களம் கண்ட 13 தேர்தல்களில் வெற்றி கண்ட சாதனையாளர் ஐந்து முறை தமிழ்நாட்டில் முதலமைச்சராக பொறுப்பேற்று மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நலன் விளைவிக்கும் திட்டங்களை வழங்கியவர், இந்திய ஜனநாயக அரசியலில் மூத்த அரசியல் தலைவர், இலக்கியம் கவிதை நாடகம் திரைப்படம் என தொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்த பன்முகத்திறன் கொண்ட படைப்பாளர்.

தமிழர்களின் நெஞ்சங்களில் நிறைந்த நம் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை திருவண்ணாமலை மாவட்டத்தில் கழக கொடி ஏற்றுதல், இனிப்பு மற்றும் உணவு வழங்குதல், நல உதவிகளுடன் பொதுக்கூட்டம், மரம் நடுதல், மருத்துவ முகாம், ரத்த தானம் கருத்தரங்குகள் பட்டிமன்றம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தல் என பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் வருடம் முழுவதும் எழுச்சியாக கொண்டாடுவது என இந்த திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் மாநகராட்சி மற்றும் நகராட்சி அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க காலை உணவு திட்டத்தை ஜூன் 3 முதல் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது அதனை இந்த மாவட்ட கழகம் சார்பில் பாராட்டி வரவேற்று மகிழ்கிறோம்.வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் 40 தொகுதிகளிலும் வென்று சாதனை படைப்போம் என கூறினார்.

நிகழ்ச்சியில் திமுக மருத்துவ அணி துணைத்தலைவர் டாக்டர் கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில அணி செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், ஊராட்சி குழு தலைவர்கள், நகர செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 May 2023 2:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை