செய்யாறு வாரச்சந்தை வரும் 22, 29ம் தேதி செயல்படாது: நகராட்சி நிா்வாகம்

செய்யாறு வாரச்சந்தை வரும் 22, 29ம் தேதி செயல்படாது: நகராட்சி நிா்வாகம்
X

பைல் படம்.

செய்யாற்றில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை ஜன. 22, 29 ஆகிய தேதிகளில் செயல்படாது என நகராட்சி நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை வரும் ஜனவரி 22, 29 ஆகிய தேதிகளில் செயல்படாது என நகராட்சி நிா்வாகம் தெரிவித்தது.

செய்யாற்றில் வழக்கமாக வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் புதிதாக கட்டடம் கட்டும் பணி தொடங்கி நடைபெறுகிறது.

அதனால், வாரச்சந்தை தற்காலிகமாக திருவோத்தூா் வேதபுரீஸ்வரா் கோயில் அருகே இயங்கி வருகிறது.

இந்த நிலையில், வேதபுரீஸ்வரா் கோயிலில் மூன்று ஆண்டுகள் கழித்து 10 நாள்கள் நடைபெறும் ரதசப்தமி பிரம்மோற்சவ விழா வருகிற ஜன.22-இல் தொடங்கி ஜன.31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அதனால், ஜன.22, 29 ஆகிய தேதிகளில் வழக்கமாக நடைபெறும் வாரச்சந்தை செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture