/* */

விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த 3 குடோன்களுக்கு சீல்

திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே விநாயகர் சிலைகள் வைத்திருந்த 3 குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த 3 குடோன்களுக்கு சீல்
X

குடோன்களுக்கு சீல் வைக்கும் அதிகாரிகள்.

இந்துக்கள் பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில விநாயகர் சிலைகள் வைக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால் வெம்பாக்கம் தாசில்தார் குமரவேல் மற்றும் வருவாய் துறையினர் போலீசாருடன் இணைந்து, பொது இடங்களில் வைக்கக்கூடிய விநாயகர் சிலைகள் செய்து வைத்திருந்த குடோன்களை ஆய்வு செய்தனர்.

அப்போது வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே அப்துல்லாபுரம் கிராமத்தில் 25 விநாயகர் சிலைகள் செய்து வைத்திருந்ததை கண்டறிந்து அந்த குடோனுக்கு சீல் வைத்தனர். அதேபோல் பிரம்மதேசம் கிராமத்தில் 2 குடோன்களில், 25 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் செய்து வைக்கப்பட்டிருந்தது. அந்த இரண்டு குடோன்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.

Updated On: 6 Sep 2021 6:57 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!