/* */

மாணவியிடம் சில்மிஷம் செய்த பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

அரசு ஆரம்பப்பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியை சில்மிஷம் செய்த பள்ளி தலைமைஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

மாணவியிடம் சில்மிஷம் செய்த பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது
X

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா சட்டுவந்தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயது மதிக்கத்தக்க மாணவியை அதே பள்ளியின் தலைமை ஆசிரியர் 9-ந்தேதி ஆடைகளை களைத்து பாலியல் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. வீட்டுக்கு வந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தாயாரிடம் கூறி, இனிமேல் நான் பள்ளிக்குச் செல்ல மாட்டேன், எனத் தெரிவித்து கண்ணீர் விட்டு கதறி அழுததாகத் தெரிகிறது. அதிர்ச்சி அடைந்த தாய் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து 20-ந்தேதி சிறுமியின் தந்தை பள்ளிக்குச் சென்று, தலைமை ஆசிரியரான ராமலிங்கத்திடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியர் ராமலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 22 March 2022 6:38 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்