/* */

மாட்டு வண்டியில் மணல் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாட்டு வண்டியில் மணல் திருடிய நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

HIGHLIGHTS

மாட்டு வண்டியில் மணல் திருட்டு
X

திருவண்ணாமலை மாவட்டம் மண்டகொளத்தூர் கிராமத்தில் தொடர்ந்து செய்யாறு பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அந்தப் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செய்யாற்று பகுதியிலிருந்து இரட்டை மாடு பூட்டப்பட்ட வண்டியில் கால் யூனிட் மணலை ஒருவர் கடத்தி வந்தார். போலீசார் நிற்பதை பார்த்த அந்த நமபர் மாட்டு வண்டியை அப்படியே நிறுத்தி விட்டு தப்பியோடினார். மாட்டு வண்டியை மணலோடு போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் தலைமறைவாக உள்ள சேகரை தேடி வருகின்றனர்.

Updated On: 14 April 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  10. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!