மாட்டு வண்டியில் மணல் திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம் மண்டகொளத்தூர் கிராமத்தில் தொடர்ந்து செய்யாறு பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அந்தப் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செய்யாற்று பகுதியிலிருந்து இரட்டை மாடு பூட்டப்பட்ட வண்டியில் கால் யூனிட் மணலை ஒருவர் கடத்தி வந்தார். போலீசார் நிற்பதை பார்த்த அந்த நமபர் மாட்டு வண்டியை அப்படியே நிறுத்தி விட்டு தப்பியோடினார். மாட்டு வண்டியை மணலோடு போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் தலைமறைவாக உள்ள சேகரை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu