புறம்போக்கு நிலத்தில் வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

புறம்போக்கு நிலத்தில் வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
X

சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 

அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பாப்பந்தாங்கல் கிராமத்தில் காலனியையொட்டி அரசு நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில் இருளர் பழங்குடியினர் உள்பட 10 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பசுமை வீடு கட்ட அவர்களுக்கு அரசாணை வழங்கப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட இடத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுத்தம் செய்து உள்ளனர்.

அங்கு வீடுகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த காலனி மக்கள் செய்யாறு-ஆற்காடு சாலையில் பாப்பந்தாங்கல் கூட்ரோட்டில் வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story
ai marketing future