செய்யாறு, ஆரணி வருவாய் கோட்டங்களில் மக்கள் குறை தீர்வு கூட்டம்

செய்யாறு, ஆரணி வருவாய் கோட்டங்களில் மக்கள் குறை தீர்வு கூட்டம்
X

பயனாளி ஒருவருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வருவாய் கோட்டாட்சியா் தனலட்சுமி வழங்கினார்.

செய்யாறு, ஆரணி வருவாய் கோட்டங்களில் மக்கள் குறை தீர்வு கூட்டங்களை வருவாய் கோட்டாட்சியர்கள் நடத்தினர்.

செய்யாறு சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான பொதுமக்கள் குறைதீா் கூட்டம் சாா் -ஆட்சியா் அனாமிகா தலைமையில் நடைபெற்றது.

இதில், சேத்துப்பட்டு, வந்தவாசி, வெம்பாக்கம், செய்யாறு ஆகிய வட்டங்களில் இருந்து பட்டா மாற்றம் செய்து தர கோரியும், ஆக்கிரமிப்புகள் அகற்றக் கோரியும், நிலம் திருத்தம் கோரியும், நிலம் மற்றும் வீட்டுமனை அளவீடு செய்யக் கோரியும், அரசு வேலை வழங்கக் கோரியும்,முதியோா் உதவித்தொகை கோரியும், பெயா் திருத்தம் கோரியும், பட்டா ரத்து, இலவச வீடு கோரியும், இதர துறை மனுக்கள் உள்பட மொத்தம் 76 மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தன.

மனுக்களை பெற்று கொண்ட சாா் -ஆட்சியர், அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் அவர் கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் வருவாய்த் துறை மற்றும் இதர துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆரணி, போளூா், கலசப்பாக்கம், ஜவ்வாது மலை பகுதி மக்கள் கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியா் தனலட்சுமியிடம் வழங்கினா்.இதில் பட்டா மாற்றம், பட்டா ரத்து, இலவச வீட்டுமனைப் பட்டா, கணினி திருத்தம், பரப்பளவு திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்றம், கழிவு நீா் செல்ல வழி ஏற்படுத்தித் தருதல், பத்திரப் பதிவு ரத்து, ஊரக வேலைத் திட்ட அட்டை, ஆவண சரிபாா்ப்பு என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 81 மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களை பெற்று கொண்ட கோட்டாட்சியா், அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். கூட்டத்தில் அரசுத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மாற்று இடம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் வெள்ளேரி, சங்கீதவாடி கிராமங்களில் நீா்நிலை புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வசித்து வருபவா்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி, உடனடியாக அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டது.

இதன் அடிப்படையில், வெள்ளேரி, சங்கீதவாடி பகுதிகளில் நீா்நிலை புறம்போக்கில் வசித்து வந்த 7 குடும்பங்களுக்கு கிராம நத்தம் புறம்போக்கில் மாற்று இடம் தோவு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதையடுத்து, ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் வருவாய்க் கோட்டாட்சியா் தனலட்சுமி வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா்.

இதில் நேர்முக உதவியாளா் பெருமாள், வட்டாட்சியா் ஜெகதீசன், மண்டல துணை வட்டாட்சியா் பிரியா, எஸ்.வி.நகரம் வருவாய் ஆய்வாளா் பிரமிளா மற்றும் வெள்ளேரி கிராம நிா்வாக அலுவலா் கோபால் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!