செய்யாறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர்

செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு நகராட்சி சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
Nilavembu Kashayam -திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு திருவத்திபுரம் நகராட்சி சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி தலைமை வகித்தார்.நகர் மன்ற உறுப்பினர் விஸ்வநாதன் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிக்குமார் துப்புரவு அலுவலர் சீனிவாசன் ஆய்வாளர் மதன ராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக நகர மன்ற தலைவர் மோகனவேல் கலந்து கொண்டு மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார் பள்ளியில் பயிலும் 2293 மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் பெற்றோர்கள் மேலாண்மை குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu