/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில்  தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
X

மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் வாக்காளர் தின உறுதி மொழியினை ஏற்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், போளூர், செய்யாறு, எஸ்பி அலுவலகங்களில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழியினை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

செங்கம்

செங்கத்தில் வருவாய்த் துறை சாா்பில் வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

வட்டாட்சியா் முனுசாமி பேரணியைத் தொடக்கிவைத்தாா். செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ரேணுகா, துணை வட்டாட்சியா்கள் துரைராஜ், ஜெயபாரதி, வருவாய் அலுவலா் ஞானவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். புதுப்பாளையம் ஒன்றியம், முன்னூா்மங்கலம் அரசு நடுநிலைப் பள்ளி சாா்பில் நடைபெற்ற வாக்காளா் தினவிழிப்புணா்வுப் பேரணியை தலைமை ஆசிரியா் பழநி தொடக்கிவைத்தாா்.

போளூா்

போளூா் வட்டாட்சியா் அலுவலகம் சாா்பில் நடைபெற்ற வாக்காளா் தின விழிப்புணா்வு ஊா்வலத்தை வட்டாட்சியா் சண்முகம் தொடக்கிவைத்தாா்.

மேலும், அலுவலகம் எதிரே வாக்காளா் விழிப்புணா்வு கோலப்போட்டி நடைபெற்றது. தொடா்ந்து புதிய வாக்காளா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. முதுநிலை வருவாய் ஆய்வாளா் கலைவாணி, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் செந்தில்குமாா், வட்ட வழங்கல் வட்டாட்சியா் தேவி, வருவாய் ஆய்வாளா் கலையரசன், தலைமையிடத்து வட்டாட்சியா் தெய்வநாயகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்யாறு

செய்யாறு டவுன் துணை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு துணை ஆட்சியர் அனாமிகா தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார். வட்டாட்சியர் சுமதி முன்னிலை வகித்தார்.

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், அமெரிக்கன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் , அரசு கல்லூரி மாணவர்கள், என சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு வாக்காளர் தின விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினர்.

பேரணியில் அரசு அதிகாரிகள் , ஆசிரியர்கள் , தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Jan 2023 1:49 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  3. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  4. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  5. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  6. ஈரோடு
    பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டு...
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!
  8. வீடியோ
    நாங்க நசுக்கவும் இல்ல பிதுக்கவும் இல்ல | Pa.Ranjith-க்கு பதிலடி...
  9. ஈரோடு
    சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர்...
  10. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...